Wednesday, May 11, 2011

முன்னுரை

கடந்த இரண்டாண்டுகளாக சென்னை பல்கலைக்கழகத்தில் M.A பட்டப்படிப்பாக ஸ்ரீ உ வே டாக்டர் ம.அ. வெங்கட க்ருஷ்ணன் ஸ்வாமியிடம் தமிழ் வேதமாகிய ஸ்வாமி நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழி பயின்று முடித்த அடியேன் ஆழ்வாரின் பகவத் குணானுபவத்திலும், ஆழ்வார் தரும் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாய விளக்கங்களிலும் முற்றிலுமாக ஈர்க்கப்பட்டுவிட்டேன்.

இந்த பகவத் விஷயத்தை நம் ஸம்ப்ரதாயத்தில் ருசி உள்ள மற்றோரும் தெரிந்துகொள்ள வேணும் என்கிற சீரிய நோக்கத்துடன் அடியேனால் தொகுக்கப்பட்ட இத் திருவாய்மொழி ஸாரத்தை எல்லா ஸ்ரீவைஷ்ணவர்களோடும் பகிர்ந்து கொள்வதில் பேரானந்தம் அடைகிறேன்.

இங்கு ப்ரசுரிக்கப்பட்டுள்ளது திருவாய்மொழியின் முதல் 500 பாசுரங்களின் ஸாரமே. மீதமுள்ள பாசுரங்களின் ஸாரம் இங்கு படப்படியாக சேர்க்கப்படும்.

இத்தொகுப்பு முழுக்க முழுக்க ஸ்ரீ உ வே மஹா வித்வான் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமி எழுதிய விளக்க உரைகளை அனுகரித்து எழுதப்பட்டது.

ஸ்ரீ உ வே வித்வான் வெங்கட க்ருஷ்ணன் ஸ்வாமிக்கும் ஸ்ரீ உ வே மஹா வித்வான் காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிக்கும் அடியேனின் அநந்த கோடி ப்ரணாமங்கள்.

தாஸன்
ரகுநாதாசார்யன்
M.A. [Divya Prabandham]
University of Madras

2 comments:

  1. adiyen namaskaram.Let me know your programs for the coming margazhi.

    ReplyDelete
  2. Adien,Namaskaram.Your commentary is superb.Expecting bal pasurams,plz

    ReplyDelete