Tuesday, February 8, 2011

4. நம் ஸ்வரூபம்

4.1 நாம் பல வகைப்பட்டவர்கள்

மக்களில் பலவகை உண்டு. நம்மில் நல்லோர்களும் உண்டு, தீயோர்களும் உண்டு.

ஒருவனுக்கு ஒர் ஆபத்து நேர்ந்தால் ‘அந்தோ! நேர்ந்ததே’ என்று அனைவரும் கூடி கலங்கவேண்டியிருக்க, உகந்து சிரிக்கும்படியும் சிலர் உண்டு.

பிறரைக் கெடுக்கவேணுமென்று கோலி தாங்களே கெட்டுப்போகிறவர்களும் உண்டு.

ஒரு பிறர்மனையிலே புகுந்து திருடுவதற்காகச் சென்று, மற்றெருவன் இவன்தன் வீட்டிலே புகுந்து இவன் பலகாலமாகக் களவுகண்டு திரட்டிவைத்திருந்த பொருள்களைலெல்லாம் கவர்ந்து சென்ற கதைகளும் உண்டு.

செல்வம் இல்லாவிடில் உறவினனாக இவனை சொல்லிக்கொள்வது நமக்கு நிறக்கேடு என்று அவனை விட்டு ஒதுங்குபவர்கள் உண்டு.

அப்படி விடப்பட்டவன் சிறிது செல்வம் பெற்றவாறே உறவினர்கள் அல்லாதாரும் கூட
இவனுடைய ஞாதிகளாக நம்மைச் சொல்லிக்கொள்ளுதல் நமக்கு மேன்மை என்று நினைத்து ‘இவரும் நாங்களும் ஒரே குடும்பம்’ என்று சொல்லி அணுகுபவர்களும் உண்டு.


4.2 செல்வத்தின் பின்னே

நெருப்பு தனக்குப் பற்றுக்கோடான இடத்தையே கபளீகரிப்பது போலே செல்வமும் தான் பற்றுகிற இடத்தை வேரோடே அழிக்கவல்லது என்பதைக் கண்ணாரக் கண்டும் “பகல்கண்ட குழியிலே இரவில் விழுவாரைப் போலே” அச்செல்வத்தை மேலும் மேலும் சேர்த்து அச்செல்வத்தினாலேயே மன அமைதி இழந்தவர்கள் உண்டு.

கையிலே நாலுகாசு உள்ளவர்களைக் கண்டால் அதைப் பறிக்கவெண்ணிச் சில உபாயங்கள் செய்து வயிறு வளர்ப்பர்கள் உண்டு.

பணத்தின் பின் அலையும் தன்மை நம் எல்லோரிடமும் இருக்கிறது. பணம் ஸம்பாதிப்பதே நம் லக்ஷ்யமாக இருப்பதால், நமக்கு பகவானை சிந்திக்க நேரமோ மனமோ இருப்பதில்லை. பணம் ஸம்பாதிப்பதே நம் லக்ஷ்யமாக இருப்பதால் நாம் குறுக்கு வழிகளில் சென்று தவறுகள் செய்து பாபத்தையும் ஸம்பாதிக்கிறோம். இந்த தாழ்ந்தும், கெட்டும் பணம் ஸம்பாதித்தவர் க்எத்தனை பேர்?

ஒன்று, அந்த பணம் தீர்ந்த பின்னும் நாம் இருப்போம். அல்லது நாம் இறந்த பின்னும் அந்த பணம் இருந்து அந்த பணத்திற்காக நம் குழந்தைகளே பரஸ்பர விரோதிகளாகி நம்மையே தூஷிப்பார்கள். இப்படி இரண்டு விதத்திலும் அந்த பணம் நமக்கு உபயோகமில்லை என்று ஆகிறது. இப்படி நமக்கு உபயோகமில்லாத பணம் நமக்கு தேவைதானா?

4.3. பதவியின் பின்னே

அடுத்தது, பதவி ஆசை. பெரிய பெரிய பதவிகள் பெற ஆசை கொண்டு நம் நிம்மதி இழந்து, அவை பின் ஓடி ஓடி, தாழ்ந்தும், கெட்டும் ஸம்பாதிக்கும் பதவிகள் பின் ஓடியவர்
பெரும் செல்வத்தில் திளைத்த பெரிய பெரிய அரசர்கள் இன்று எங்கே? ஓர் படை எடுப்பில் தோற்று தன் தேசத்தை விட்டு, தன் மனைவி மக்களை எதிரிகளின் பிடியில் விட்டு ஓடி காட்டில் மறைந்து வாழ்ந்து ஒரு வேளை சோற்றுக்கு அலைந்தவர்களின் சரித்திரங்கள் நமக்கு போதிப்பது என்ன?

இன்றும் கூட, ஒரு காலத்தில். பெரிய பெரிய பதவிகளில் இருந்தவர்கள் இன்று எந்த மூலையில் கிடக்கிறார்கள்?


4.4. சிற்றின்பங்களின் பின்னே

அடுத்தபடியாக சிற்றின்பங்கள். சிற்றின்பங்களே வாழ்க்கை என்று இந்த சிற்றின்பங்களில் சிக்கி தன் வாழ்வையே பாழாக்கிக்கொண்டவர்கள் எத்தனை பேர்?

உண்மை இப்படி இருக்க, நித்யமான பகவானை விட்டு அந்த அநித்யமான பணம், பதவிகள், சிற்றின்பங்கள் பின் சென்று நாம் நம் அரிய மனித வாழ்வை வீண் அடித்தவர் எத்தனைபேர்?

ஒவ்வொரு சேதனருடைய ருசி, ஞானம் ஒவ்வொரு விதமாகையினாலே ஒருவன் போகத்திலே, ஒருவன் உழைப்பதிலே, இன்னொருவன் மற்றொன்றிலே ஈடுபய்யிருப்பான்.

இப்படி உலகத்திலுள்ள சேதநர்கள் ஸாத்விகராகவும் ராஜஸராகவும் தாமஸராகவும் இருப்பார்கள்.


4.5 அஹங்கார மமகாரங்களுடன்


1. உலகங்கட்கெல்லாம் ஓரரசாக வீற்றிருந்து வாழ்ந்தவர்கள்
2. எம்பெருமானாகவே தம்மைப் பாவித்திருந்த அரசர்கள்

3. உயிர் தப்பிப் பிழைக்கவேண்டியிருந்தீர்களாகில் நம்பக்கலில் கப்பஞ் செலுத்தி வாழ்ந்துபோங்கள்’ என்று ஒரு கட்டளை தெரிவித்தமாத்திரத்திலேயே பகைவர்கள் பணிந்து நின்று வணங்கப்பட்டவர்கள்

4. ஒலிக்கின்ற பேரிகைகள் தமது மாளிகை முற்றத்திலே சப்திக்க, பெரு மிடுக்காக உலகத்தை ஆண்ட ஸார்வபௌமர்கள்

5. சிற்றரசர்கள் கொண்டுவரும் உபஹாரங்களைத் தங்கள் கையாலே நேராக வாங்காமல் ஆளிட்டவர்கள்
6. மற்றுள்ள அரசர்கள் தங்களை யடிபணிந்து நிற்க அவர்களை மதியாதே ஆடல் பாடல் கண்டு போதுபோக்கி வாழ்ந்தவர்கள்

7. நெடுநாள் மதிப்போடே ஜீவித்துக்கிடந்தவர்கள்

8. தம் காலிலே குனிந்தவர்களை லக்ஷியம் பண்ணாதிருந்தவர்கள்

9. உலகமெல்லாம் கொண்டாடும்படியான புகழையுடையனராயும், பரம்பரையாகவே ப்ரபுக்களாக வாழ்வர்கள்

இப்படி எத்தனைபேர்கள் இருந்திருப்பார்களென்று நினைக்கத் தொடங்கினால், கடல் எக்கலிடுகிற நுண்ணிய மணல்களை எண்ணி முடித்தாலும் முடிக்கலாம்; இவர்களை எண்ணி முடிக்கப்போகாது. நாளடைவிலே இவர்களின் கதி என்னவாயிற்று என்று பார்த்தால்....................

1. இப்படிப்பட்டவர்களில் பலர் தரித்ரர்களாய்த் தடுமாறும்படியைக் கண்கூடாகக் காணப்பெற்றது உண்டு.

2. பட்டினி கிடக்கமுடியாமல் பலருங்காண வெளியில் புறப்படமாட்டாமல் இருட்டு வேளைகளிலே புறப்பட்டு பிச்சைக்கு இருளிலே செல்ல வழியிலே கருநாய் கிடப்பதறியாதே அதன் மேலே காலை வைத்திட அவை கடித்திட, அந்த உபாதை பொறுக்கமாட்டாமல், கையிலிருந்த பிச்சைப் பானையைக் கீழே நெகிழ விட பிச்சைப்பானை கீழே விழுந்து உடைந்த வோசை கேட்டும் நாய் கத்தின வொலி கேட்டும் ஓடிவந்து காணத்திரள் திரண்டு “முன்பு கொற்றக்குடையின் நிழலிலே வாழ்ந்தவனுக்கா இக்கதி வந்திட்டது!” என்று சொல்லும் நிலைமை நேர்ந்த்தும் உண்டு.

3. வெண்கொற்றக்குடை நிழிலிலே இனிதாக வாழ்ந்தவர்கள் அந்த நிலைமையை யிழந்து காடுகளுக்கு ஓட, அங்குந் தொடர்ந்து பகைவருடைய ஆட்கள் வர என்று ஆனதும் உண்டு

4. ஏழைமைக் கொடுமையும் உடன்சேர்ந்து அரையில் எட்டம் போராதே முன்பக்கத்திலே மாத்திரம் குஹ்யத்திற்கு ஆவரணமாகச் சிறிது துணி தொங்க, தேஹயாத்திரைக்காக யாசிக்கப் புக, ஏளனம் செய்யப்பட்டவர்கள் உண்டு.

வாழ்ந்தவர்களாக உங்களால் நினைக்கப்படுகிறவர்கள் வாழ்ந்திருந்தாலும் மழைப்பெருக்கிலுண்டாகும் நீர்க்குமிழிபோலே நசித்து நசித்து, அதோகதியிலே விழுந்து ஒழிந்துபோனவர்களே தவிற ப்ரஹ்மஸ்ருஷ்டி ஏற்பட்ட காலம்முதல் இன்றளவும் வாழ்ந்தவர்கள் ஒருபடியாக வாழ்ந்தே போந்தார்கள் என்பது கிடையாது. 4.9


4.6 ஆஸ்திகமும் நாஸ்திகமும்

ஆத்திகத்தைப்பொருத்த அளவிலே, சிலர் ஆஸ்திகர்களாயும், சிலர் நாஸ்திகர்களாயும் இருப்பார்கள். மற்றும் பலர் ஆஸ்திகமும் இல்லாமல் நாஸ்திகமும் இல்லாமல் நடுவே இருப்பார்கள்.

சுத்த ஸாத்வீகர்களாக இருப்பவர்கள் எம்பெருமானையன்றி மற்றொரு தெய்வத்தையும் தொழாதவர்களாயும் வேறொரு பிரயோஜனத்தையும் விரும்பாதவர்களாய் இருப்பார்கள்;

ஆனால் மற்ற குணங்கட்கு வசப்பட்டவர்கள் ஐச்வர்யம், ஆரோக்யம், ஸந்தானம் முதலிய க்ஷுத்ரபலன்களை விரும்புபவர்களாய், அப்படிப்பட்ட பலன்களையும் நேரே எம்பெருமானிடத்துச் சென்று கேட்டாமல், தாம் தாம் அபிமானித்திருக்கிற மற்ற தெய்வங்கள் பக்கலிலே சென்று விரும்புபவர்களாயிருப்பார்கள்.

அப்படிப்பட்ட ருசிபேதங்களினால் அவர்கள் கோலின பலன்களுக்காக அனுஷ்டிக்கும் ஸாதனங்களும் பலவகைப்பட்டிருக்கும். சிலர் த்யானத்தினாலும், சிலர் யஜ்ஞங்களினாலும், சிலர் அர்ச்சனையினாலும், சிலர் திருநாமஸங்கீர்த்தநங்களினாலும், சிலர் அபிஷேகத்தினாலும் ஆகவிப்படி வெவ்வேறுபட்ட வகைகளாலே தெய்வங்களை வழிபடுவார்கள். . 1.1.5

இறையவர் என்கிற வாசகம் ஸ்ரீமந்நாராயணனுக்கே அஸாதாரணமாயினும், சேதநர்களின் அபிமானத்தயடியொற்றி இந்திரனென்றும் சந்திரனென்றும் சிவனென்றும் பிரமனென்றும் காளியென்றும் ஐயனென்றும் அம்மனென்றும் இப்படி ஒவ்வொரு தெய்வத்தை ஸ்வாமியாகக் கொள்வர். 1.1.5


ஆக, நாம் ஒவ்வொருவரும் நம் குணம் என்ன, ருசி என்ன, ஸ்வரூபம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஸ்வஸ்வரூபஞானம் எற்பட்டு, ஆத்திகத்தில் ருசி எற்பட்டாலேயே பரஸ்வரூபஞானம் ஏற்படும். 5.7.1

1 comment:

  1. Best slots online for playing real money or for real money.
    Top Slots Online: Slots by NetEnt — Top Real Money Slots 강릉 출장샵 Online: Slots 남원 출장샵 by NetEnt — Top Real Money Slots 충청남도 출장샵 Online: Slots by NetEnt — Top Real Money Slots Online: Slots by NetEnt — Top Real Money Slots 원주 출장샵 Online: 성남 출장샵

    ReplyDelete